இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டிக்கு இலங்கையர் இருவர் தெரிவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 28, 2021

இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டிக்கு இலங்கையர் இருவர் தெரிவு

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டிக்கான தெரிவுப் போட்டியாக நடத்தப்பட்ட போட்டியில் மத்துகம ஆனந்தா சாஸ்த்ராலய பாடசாலையின் மாணவன் இசுரு கெளஷல்ய, கொழும்பு லும்பினி பாடசாலையின் மாணவி மெதானி ஜயமான்ன இருவரும் சிறந்த ‍நேரப் பெறுதியில் ஓடி முடித்தனர்.

இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டிக்கு ஏற்கனவே தெரிவாகியுள்ள இவர்கள் இருவரும் நேற்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டிக்கான தெரிவுப் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

இதில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இசுரு கெளசல்ய போட்டித் தூரத்தை 46.90 செக்கன்களில் ஓடி முதலிடம் பிடித்தார்.

இது ஆசிய பிராந்தியத்தில் அவரது வயதுப் பிரிவில் எட்டப்பட்ட 7 ஆவது அதி சிறந்த நேரப் பெறுதியாக பதிவாகியுள்ளது. எனினும், அவரது வயதுப் பிரிவில் இவ்வருடத்தில் பதிவான அதிசிறந்த நேரப் பெறுதியாக குறிப்பிடப்படுகிறது.

இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டியின் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள மெதானி ஜயமான்ன, ‍நேற்றைய தினம் நடைபெற்ற பெண்களுக்கான மீற்றர் ஓட்டப் போட்டியில் 11.85 செக்கன்களில் ஓடி முடித்ததால் இளையோர் உலக மெய்வல்லுநர் போட்டியின் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்கேற்கும் தகுதியை பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment