பிள்ளையான் போன்று அண்மையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் - சாணக்கியன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 22, 2021

பிள்ளையான் போன்று அண்மையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் - சாணக்கியன்

பேஸ்புக் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்த அவர், இந்த இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய இரா.சாணக்கியன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலை செய்யப்பட்டமை போன்று குறித்த இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரினார்.

மேலும் இந்த விவகாரம் குறித்தும் ஏற்கனவே பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.

அரசாங்கம் எடுக்கும் முயற்சியை சீர்குலைக்க வேண்டாம் என்றும் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உள்ள நிலையில் நேற்று மட்டும் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்றும் நாமல் ராஜபக்ஷ, கேள்வியெழுப்பினார்.

No comments:

Post a Comment