போர் நிறுத்தத்தின் பின் காசா பகுதியில் இஸ்ரேலின் இரண்டாவது தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Friday, June 18, 2021

போர் நிறுத்தத்தின் பின் காசா பகுதியில் இஸ்ரேலின் இரண்டாவது தாக்குதல்

இந்த வாரம் இரண்டாவது தடவையாகவும் இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் அமைந்துள்ள ஹமாஸ் தளங்களை குறி வைத்து தாக்கியுள்ளது.

கடந்த மாதத்தின் 11 நாள் யுத்தம் முடிவடைந்த பின்னர், இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதியில் முன்னெடுக்கும் தொடர்ச்சியான வான் வழித் தாக்குதல்களில் இது அண்மையது ஆகும்.

இஸ்ரேலிய ஏவுகணைகள் வியாழக்கிழமை காசா நகரத்தின் வடமேற்கிலும், பீட் லஹியாவின் வடக்கிலும் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் ஹமாஸ் ஆயுதக் குழுக்களுக்கு சொந்தமான பல தளங்களைத் தாக்கியதாக பலஸ்தீனிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் தாக்குதலினால் எதுவித உயிரிழப்புக்களும் பதிவு செய்யப்படவில்லை.

இஸ்ரேலில் காசா பகுதியில் இருந்து அனுப்பப்பட்ட தீக்குளிக்கும் பலூன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வான் வழித் தாக்குதல்கள் நடந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக முற்றுகையிடப்பட்ட இடத்திலுள்ள ஹமாஸ் படையினர், தெற்கு இஸ்ரேலுக்கு தீக்குளிக்கும் பலூன்களை அனுப்பியமைக்கு பதிலளிக்கும் விதமாக புதன்கிழமை அதிகாலை இஸ்ரேலிய விமானப்படை காசா பகுதியில் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

ஹமாஸ் என்பது காசா பகுதியை இயக்கும் ஒரு போராளிக்குழு மற்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதப்படுகிறது.

காசாவில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனியம் இடையே கடந்த மே 21 அன்று முன்னெடுக்கப்பட்ட எகிப்திய தரகு யுத்த நிறுத்தம் 11 நாள் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்தது.

அந்த தாக்குதலில் 66 குழந்தைகள் உட்பட 256 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், 12 இஸ்ரேலியர்களும் ஹமாசின் ரொக்கெட் தாக்குதல்களினால் பலியானார்கள்.

இந்த போர் நிறுத்தத்தின் பின்னர் அரங்கேறிய இரண்டாவது தாக்குதலாக அண்மைய சம்பவம் பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment