ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாநகர சபையின் ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொக்குவில் 1ம் குறுக்கு வீதியை கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதனால் பிரதேச மக்கள் போக்குவரத்தில் எதிரநோக்கி வந்த சிரமங்கள் நீங்கும் என வட்டார உறுப்பினர் ரகுநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் கொக்குவில் வட்டார உறுப்பினர் கே. ரகுநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாநகர முதல்வர் எஸ். சரவணபவன், மாநகர உறுப்பினர்களான எஸ். ஜெயா எஸ். மதன் பொறியியலாளர் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment