தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடத்தப்படுகின்ற விருந்துபசாரங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை சுற்றிவளைப்பதற்கான விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இரவு வேளைகளில் இடம்பெறுகின்ற இவ்வாறான நிகழ்வுகளை சுற்றிவளைக்குமாறு நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment