வாழைச்சேனையில் இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனை : நான்கு பேருக்கு தொற்று - News View

About Us

About Us

Breaking

Monday, June 14, 2021

வாழைச்சேனையில் இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனை : நான்கு பேருக்கு தொற்று

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் பயணக் கட்டுப்பாட்டை மீறி இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடமாடும் வேலைத்திட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் இன்று திங்கட்கிழமை பயணக் கட்டுப்பாட்டை மீறி இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடிய முப்பத்தெட்டு (38) நபர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் நடைபெற்ற பரிசோதனை நிகழ்வில்; மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment