இலங்கையின் சீரற்ற வானிலையால் 20 பேர் உயிரிழப்பு - 44,946 குடும்பங்களைச் சேர்ந்த 1,76,419 பேர் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

இலங்கையின் சீரற்ற வானிலையால் 20 பேர் உயிரிழப்பு - 44,946 குடும்பங்களைச் சேர்ந்த 1,76,419 பேர் பாதிப்பு

இலங்கை முழுவதும் தொடரும் சீரற்ற வானிலை காரணாமக உண்டான அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைவத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

வெள்ளம், மண்சரிவு, பலத்த காற்று, மரம் முறிந்து வீழ்தல் போன்ற சீரற்ற காலநிலையினால் உண்டான அனர்த்தங்கள் காரணமாக நாடு முழுவதும் 44,946 குடும்பங்களைச் சேர்ந்த 1,76,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 90 பிரதேச செயலாளர் பிரிவுகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தோர் - 05
காணாமல்போனவர்கள் - 02
முழுமையாக சேதமடைந்த வீடுகள் - 20
பகுதியளவிலான வீடுகள் சேதம் - 10,83
பாதுகாப்பான நிலையங்கள் - 60
பாதுகாப்பான நிலையங்களில் உள்ள குடும்பங்கள் - 747
பாதுகாப்பான நிலையங்களில் உள்ள நபர்கள் - 2,905
உறவினர்களின் வீடுகளில் உள்ள குடும்பங்கள் - 1,442
உறவினர்களின் வீடுகளில் உள்ள நபர்கள் - 5,084

No comments:

Post a Comment