திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா தொற்றாளர்களை பரிசோதனை செய்யும் இயந்திரம் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் சிரமப்படுவதாகவும் அதன் தேவை கருதி பிரதமரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் அது தொடர்பான மரணங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றது.
குறித்த கொரோனா தொற்றாளர்களை பரிசோதனை செய்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் வைத்தியசாலையில் இல்லாத நிலையில் தொற்றாளர்களை பரிசோதனை செய்வதற்கு மட்டக்களப்பு மற்றும் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு அனுப்பி வைப்பதனால் காலதாமதமும் சிரமங்களையும் எதிர்நோக்கி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் பிரதமர் மகிந்த இராஜபக்ஷவிடம் இது தொடர்பான வேண்டுகோளினை விடுத்துள்ளார்.
அதற்கமைய குறித்த உபகரணத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை தாம் மேற்கொள்வதாக பிரதமர் தம்மிடம் வாக்குறுதி அளித்தாக இரா. சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment