மன்னாரில் இரண்டு தேவாலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டன! - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

மன்னாரில் இரண்டு தேவாலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

மன்னாரில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா திருப்பலி இடம் பெற்ற இரண்டு தேவாலயங்கள் இன்றைய தினம் (01) காலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதியில் உள்ள இரண்டு ஆலயங்களிலும் இன்றையதினம் திருவிழா திருப்பலி இடம்பெற்றது.

இந்த நிலையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா மேற்கொண்ட குற்றச்சாட்டில் குறித்த இரண்டு ஆலயங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றில் இருந்து எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த இரு ஆலயங்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment