யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைகளுக்கு சீல்! - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைகளுக்கு சீல்!

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபானசாலைகளுக்கு முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயணத் தடை தற்காலிகமாக தளர்த்தப்படும் காலப்பகுதியில் மதுபானசாலைகளைத் திறக்க அனுமதியில்லை என அறிவுறுத்தியுள்ளது.

அதனால் நாடு முழுவதும் மதுபானசாலைகள் மதுவரித் திணைக்களத்தினரால் பூட்டப்பட்டு முத்திரையிடப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சட்டத்துக்குப் புறம்பாக அதிக விலைகளில் மதுபான விற்பனைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment