நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்றால் காலமானார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வெங்கட் சுபா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தினசரி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், நடிகர் பாண்டு, நடிகர் நிதிஷ் வீரா உள்ளிட்ட திரைபிரபலங்கள் சமீபத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (29) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெங்கட் சுபா பல்வேறு டிவி தொடர்களில் நடித்துள்ளார். யூ டியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்த அவர் மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
No comments:
Post a Comment