மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் இயந்திரம் உள்ளிட்ட உபகரண தொகுதியொன்றினை கையளிக்கும் நிகழ்வு இன்று 28.05.2021 ஆந் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கறித்தாஸ் எகெட் நிறுவக அனுசரனையுடன் இயங்கும் பல்சமய ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கமைய மலேசியாவில் இயங்கி வரும் சமூக நல அமைப்பான "அலாகா' தொண்டு நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் 11 மில்லியன் பெறுமதியான பீ.சி.ஆர் இயங்திரத்துடன் உப இயந்திர சாதன தொகுதியொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த ஆகியோர் முன்னிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சினி, நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் பி.தேவகாந்தன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் இவ்நிதியுதவிக்கான திட்ட இணைப்பார் தர்ஷசன் அம்பலவாணர், தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள், உப தலைவர் அருட்பணி யோசப்மேரி, மட்டக்களப்பு கறித்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குணர் அருட்பணி ஜேசுதாசன், மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை ராஜன் றொகான் அடிகளார், பொருளாளர் மொகமட் இக்பால், மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் இணைப்பாளர் திரு. கிறிஸ்டி, எகெட் உத்தியோகத்தர் திரு. டோமினிக் உள்ளிட்டோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் மனிதநேய செயற்பாட்டிற்காக மாவட்ட மக்களின் நன்மைகருதி பாரியதொரு நிதிப் பங்களிப்பின் மூலமாக பீ.சி.ஆர் இயந்திரம் உள்ளிட்ட உபகரண தொகுதியை பெற்றுக் கொடுத்த பல் சமய ஒன்றியத்திற்கு மாவட்ட கொவிட் செயலணி இதன்போது நன்றி தெரிவித்து பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment