கொரோனா அச்சுறுத்தல் ! மேலும் தனிமைப்படுத்தப்பட்டன சில பகுதிகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

கொரோனா அச்சுறுத்தல் ! மேலும் தனிமைப்படுத்தப்பட்டன சில பகுதிகள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் 3 மவாட்டங்களில் 5 பொலிஸ் பிரிவுகளும் 3 கிராம சேவகர் பிரிவுகளும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல ஆகிய பொலிஸ் அதிகார பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குருணாகல் மாவட்டத்தின் பன்னல பொலிஸ் அதிகார பிரதேசம் மற்றும் உடுபத்தாவ, கல்லமுன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் ஆகியன உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவில் எலமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment