வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் முத்தையா முரளிதரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 18, 2021

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் முத்தையா முரளிதரன்

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுக்களை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முத்தையா முரளிதரன் படைத்துள்ளார்.

நேற்றுதான் அவர் தனது 48 வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார்.

முத்தையா முரளிதரன் தற்போது ஐதராபாத் சன் ரைசஸ் அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment