மூடப்பட்டது தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

மூடப்பட்டது தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மூடத் தீர்மானித்துள்ளதாக தம்புள்ளை மேயர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று தொடக்கம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்கு குறித்த பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள், மற்றும் சேவையாளர்கள் உள்ளிட்டவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment