புனித ரமழான் மாதத்திற்குள் அசாத் சாலியை விடுவியுங்கள் - ரியாஸ் சாலி ஜனாதிபதிக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Friday, April 16, 2021

புனித ரமழான் மாதத்திற்குள் அசாத் சாலியை விடுவியுங்கள் - ரியாஸ் சாலி ஜனாதிபதிக்கு கடிதம்

ஷரீஆ சட்டம் பற்றி ஊட­கங்­களில் கருத்து தெரி­வித்­த­தாக குற்றம் சுமத்தி கொள்­ளுப்­பிட்டி சந்­தையில் கைது செய்­யப்­பட்ட அசாத்­ சாலி தற்­போது பயங்­க­ர­வாத தடுப்­புச் ­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத் தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என அவர் ­மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

எனது சகோ­தரர் தீவி­ர­வா­தியோ அடிப்­ப­டை­வா­தியோ அல்ல. அவரை புனித ரமழான் மாதத்தில் விடு­தலை செய்­யுங்கள் என­ அ­சாத் சாலியின் சகோ­தரர் ரியாஸ் சாலி ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்ளார்.

கடி­தத்தில் மேலும் தெரிவிக்க ப்­பட்­டுள்­ள­தா­வது “அடிப்படைவாதத்துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை பாது­காப்பு பிரிவினரிடம் சர­ண­டையச் செய்­வ­தற்கு அவர் பாரிய முயற்­சி­களை மேற்­கொண்டார். 

அடிப்­ப­டை­வா­தத்­துக்கும், தீவி­ர­வா­தத்­துக்கும் எதி­ராக குரல் கொடுத்தவர் அவர். அவரின் விடு­த­லையை பல்­வேறு சிவில்­ ச­மூக அமைப்­புகள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன. 

இந்­நி­லையில் அவர் மீதான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி ரமழானில் விடு­தலை செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்கொள்­ளு­மாறு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கு­மாறு வேண்­டிக்­கொள்­கிறேன்.

தான் நிர­ப­ராதி குற்­ற­மற்­றவன் என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு அவ­ருக்கு அவ­காசம் வழங்­கு­மாறும் கேட்­டுக்­ கொள்­கிறேன் என கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Vidivelli

No comments:

Post a Comment