குற்றப் புலனாய்வு பிரிவினரால் துப்பாக்கிகளுடன் நால்வர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

குற்றப் புலனாய்வு பிரிவினரால் துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

(செ.தேன்மொழி)

குருவிட்ட மற்றும் அவிசாவளை பகுதிகளில் நேற்றிரவு குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கியுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குழல் 12 ரக துப்பாக்கியுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியை அவதானித்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் அதிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குழல் 12 ரக துப்பாக்கி ஒன்றையும், அதன் இரு தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இரத்தினபுரி மற்றும் குருவிட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37, 42, 49 ஆகிய வயதுடைய மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாயின்ன பகுதியில் குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹேவாயின்ன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment