விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமைய 8,957 குற்றச்சாட்டுக்கள் - 295 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 3, 2021

விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமைய 8,957 குற்றச்சாட்டுக்கள் - 295 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

(செ.தேன்மொழி)

மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, நான்காவது நாளாக இன்று காலை ஆறு மணி வரையில் 8,957 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி ஏற்படும் இழப்புகளை தவிர்ப்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையானது இன்று சனிக்கிழமை வரை இடம்பெற்றிருந்தது.

அதற்கமைய இன்று காலை வரை மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் 8,957 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மதுபோதையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியதாக 264 பேரும், மிக வேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டியதாக 85 பேரும், அதிகூடிய வேகத்தில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டியதாக 80 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைக்கவசம் அணியாமல் இருந்ததாக 1298 பேரும், வீதி ஒழுங்கு விதிகளை முறையாக பேணாமை தொடர்பில் 2002 பேரும், அனுமதிபத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 875 பேரும், வேறு வகையான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 4105 பேரும், மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று பேர் பயணித்தமை தொடர்பில் 248 பேரும் இடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்புகளின் போது, போக்குவரத்துக்கு பொறுத்தமற்ற 295 மோட்டார் சைக்கிள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கும் நோக்கத்திலேயே, இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment