நாடு முழுவதும் ஏப்ரல் 18 பிற்பகல் 12 மணி முதல் நேற்று காலை 6 மணிவரையான 18 மணிநேரக் காலப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக 905 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது பல்வேறு போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் 6,898 பேருக்கு எதிராக போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவற்றுள் அதிகமான வழக்குகள் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் தொடர்புடையவை ஆகும்.
No comments:
Post a Comment