வவுனியாவில் 16 எருமை மாடுகளின் உயிரைக் காவு கொண்ட புகையிரதம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

வவுனியாவில் 16 எருமை மாடுகளின் உயிரைக் காவு கொண்ட புகையிரதம்

வவுனியா ஓமந்தை பகுதியில் 16 எருமை மாடுகளை கடுகதி புகையிரம் இன்று காலை (22.04.2021) மோதியதில் அனைத்து மாடுகளும் பலியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதமே ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியுள்ளதாகவும், இதன் காரணமாக பல இலட்சம் பெறுமதியான 16 எருமை மாடுகள் குறித்த இடத்திலேயே பலியாகியுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் மேச்சல் தரை இன்மையால் பலரும் தமது மாடுகளை மேச்சலுக்காக வேறு இடங்களுக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையில், அவை வீதியோரங்கள் மற்றும் புகையிரத வீதிகளுக்கு அருகிலேயே இரை தேடி வரும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment