எதிர்வரவுள்ள தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை ஏப்ரல் 12ஆம் திகதியும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சினால் இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பானது எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளதால், அன்றைய தினத்திற்கு முதல்நாளான திங்கட்கிழமையை விசேட அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக பொது நிர்வாகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஏப்ரல் 10, 11, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களுடன் ஏப்ரல் 12, 13, 14 (திங்கள், செவ்வாய், புதன்கிழமை) தொடர்ச்சியான விடுமுறை தினமாக அமையவுள்ளது.
No comments:
Post a Comment