இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடந்த 5 ஆம் திகதி இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.
இந்திய மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 இலட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 780 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 கோடியே 30 இலட்சத்து 60 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 19 இலட்சத்து 13 ஆயிரத்து 292 ஆக உள்ளது.
தொற்று பாதிப்புடன் 9 இலட்சத்து 79 ஆயிரத்து 608 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 67 ஆயிரத்து 642 ஆகும்.
இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 43 இலட்சத்து 34 ஆயிரத்து 262 ஆக உயர்ந்து.
கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், இந்திய பயணிகளுக்கு தடை விதிப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment