நாட்டில் அச்சிடப் பயன்படுத்தப்படும் காகிதத் தாளுக்குப் பற்றாக்குறை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

நாட்டில் அச்சிடப் பயன்படுத்தப்படும் காகிதத் தாளுக்குப் பற்றாக்குறை

தற்போது நாட்டில் அச்சிடப் பயன்படுத்தப்படும் காகிதத் தாளுக்குப் பற்றாக்குறை நிலவி வருவதாக, இலங்கை பத்திரிகைக் கழகம் தெரிவித்துள்ளது.

காகித விலையும் சுமார் 30 சத வீதம் அதிகரித்துள்ளதாகவும், சங்கத்தின் தலைவர் டிலான் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

காகித இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு அதிக செலவுகளைச் செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் கொரியாவிலிருந்தே அச்சிடப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான காகிதங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதேவேளை, தற்போது இந்தியாவிலும் அச்சிடப் பயன்படுத்தும் காகிதப் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஐ.ஏ. காதிர் கான்)

No comments:

Post a Comment