மூதூரில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, March 25, 2021

மூதூரில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்லைநகர் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் 42 வயதுடைய பெண் ஒருவரை மூதூர் சிறு குற்றத் தடுப்பு பொலிஸார் நேற்று (24) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 2,200 மில்லி கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இப்பெண் வீட்டில் கேரளா கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக மூதூர் சிறு குற்றத் தடுப்புப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அவ்வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டில் இருந்து கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் மூதூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் இன்று (25) ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment