கிளிநொச்சியில் கோர விபத்து - தந்தையும், இரு மகன்களும் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, March 26, 2021

கிளிநொச்சியில் கோர விபத்து - தந்தையும், இரு மகன்களும் பலி

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று இரவு (26) இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி கார் காணப்படுவதாவும் அதற்கு நேரெதிரே டிப்பர் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வீதியைவிட்டு விலகிய ரிப்பர் காருடன் மோதி விபத்து இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் 9 மற்றும் 12 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம், சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில், பளை தர்மங்கேணி பகுதியைச் சேர்ந்த சற்குணம் சாருஜன், சற்குணம் சாரங்கன் என்ற இரு சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவர்களின் சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment