நாட்டில் விஷத்தன்மை வாய்ந்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு, சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தினால், அஃப்லடோக்ஸின் (Aflatoxin) என்ற வகையிலான புற்றுநோய் ஏற்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
13 கன்டேனர்கள் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டு, சந்தைக்கு விடப்பட்டிருப்பதாகவும் அந்தச் சங்கம் மேலும் சுட்டிக்காட்டிள்ளது.
(ஐ.ஏ. காதிர் கான்)
No comments:
Post a Comment