அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு - பொலிஸ் அதிகாரி உட்பட பலர் பலி என தகவல் - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு - பொலிஸ் அதிகாரி உட்பட பலர் பலி என தகவல்

அமெரிக்காவின் கொலராடோவில் சந்தேகநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வைத்துள்ளதால் அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அந்நாட்டு நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அவர் காயமடைந்துள்ளதாகவும் போல்டர் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டென்வரில் உள்ள ஏ.பி.சி. செய்திச் சேவை, பல சட்ட அமுலாக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்து பகுதி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தது.

எனினும் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஒரு செய்தி மாநாட்டின் போது பொலிஸ் அதிகாரிகள் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை. துப்பாக்கி சூட்டிற்கான சாத்தியமான நோக்கம் பற்றிய தகவல்களையும் அவர்கள் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment