இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்குவதில் எவ்வித கால தாமதம் ஏற்படாது : அமைச்சர் சன்ன ஜயசுமன - News View
  • Home
  • about us
  • contact us

News View

About Us

About Us
    • உள்நாடு
    • அரசியல்
    • கல்வி
    • வெளிநாடு
    • விளையாட்டு
    • தொழிநுட்பம்
    • கட்டுரைகள்
    • சினிமா

    Breaking

    Thursday, March 25, 2021

    Home உள்நாடு இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்குவதில் எவ்வித கால தாமதம் ஏற்படாது : அமைச்சர் சன்ன ஜயசுமன

    இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்குவதில் எவ்வித கால தாமதம் ஏற்படாது : அமைச்சர் சன்ன ஜயசுமன

    Newsview March 25, 2021 உள்நாடு,
    (எம்.மனோசித்ரா)

    இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்ட்ரசெனேகா கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக அதனைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித கால தாமதமும் ஏற்படாது. தற்போது 4 இலட்சம் அஸ்ட்ரசெனேகா தடுப்பூசிகள் கையிறுப்பில் உள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

    அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

    அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்ட்ரசெனேகா கொவிட் தடுப்பூசிகளை வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்வதனை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக எமக்கு அவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்படவில்லை.

    முதற்கட்டமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை உரிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. 

    இதுவரை இலங்கைக்கு 12 இலட்சத்து 64,000 அஸ்ட்ரசெனேகா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தற்போது 4 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஏப்ரல் 10 ஆம் திகதியின் பின்னரே இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

    எனவே கையிருப்பில் உள்ள 4 இலட்சம் தடுப்பூசிகளை உபயோகித்து மே மாத இறுதி வரை இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசிகளை வழங்க முடியும். எனவே இதில் எவ்வித கால தாமதமும் ஏற்படாது. இது தொடர்பில் இந்தியாவுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

    அத்தோடு மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தியோகபூர்வமற்ற ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

    Tags # உள்நாடு
    Share This
    Author Image

    About Newsview

    உள்நாடு
    Author - Newsview at March 25, 2021
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Tags உள்நாடு

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Author Details

    Variables / Comments

    • disqusShortname
    • commentsSystem

    Entertainment

    TrendsTen
    all right reserved. develop by max mithun khan. Powered by Blogger.

    Labels

    • அரசியல்
    • உள்நாடு
    • கட்டுரைகள்
    • கல்வி
    • சினிமா
    • தொழிநுட்பம்
    • விளையாட்டு
    • வெளிநாடு

    Follow Us On Facebook

    Eastern CM Speech

    popular

    • எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
      எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
      மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எர...
    • தேர்தலில் போட்டியிட்ட 2,600 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தேர்தல் ஆணையாள
      தேர்தலில் போட்டியிட்ட 2,600 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தேர்தல் ஆணையாள
      (எம்.மனோசித்ரா) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஆனால் இதுவரையில் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்...
    • இலங்கை பங்குச் சந்தையில் முதன் முறை சாதனை
      இலங்கை பங்குச் சந்தையில் முதன் முறை சாதனை
      கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் முதன் முறையாக அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 18,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இலங்க...
    • வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 சிறார்கள் : ஒப்பந்தக்கார பெண்மணி பொலிசாரால் கைது
      வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 சிறார்கள் : ஒப்பந்தக்கார பெண்மணி பொலிசாரால் கைது
      உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் சுகவீனமுற்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இன்று (30) மட்டக்களப்பு - கரடியனாறு ஆரம்ப பாடசாலையில் குறித்த சம்ப...
    • “பாஸ்போர்ட்” பெறுவதற்கு மீண்டும் டோக்கன் முறை
      “பாஸ்போர்ட்” பெறுவதற்கு மீண்டும் டோக்கன் முறை
      கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக இனிமேல் டோக்கன் வழங்கப்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.  ஜூலை 02 ஆம் திக...

    Pages

    Total Pageviews

    Contact Form

    Name

    Email *

    Message *

    All Right Reserved by News Views | Design by Max Mithun Khan
    All Rights Reserved By News View | Design by max mithun khan