பசறை, பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த குடும்பப் பெண்ணொருவரின் கழுதத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை இனந்தெரியாத நபரொருவர் இன்று (12-03-2021) பிற்பகல் அறுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் பசறை பகுதியில் உள்ள அரச நிறுவனமொன்றில் கடமையாற்றி வரும் நிலையில் அவரது மகளை மேலதிக வகுப்பில் இருந்து அழைத்து வர சென்ற வேளையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபரை தேடி வரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment