காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஹொரோயின் போதைப் பொருளுடன் வாழைச்சேனையில் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, March 25, 2021

காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஹொரோயின் போதைப் பொருளுடன் வாழைச்சேனையில் கைது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை மாலை ஹொரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து நாவலடி இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்தில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது 5020 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் காத்தான்குடியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே நாவலடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் வாழைச்சேனை இராணுவ புலனாய்வுப் பிரிவினர், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பிரதேசத்தில் போதை வியாபாரத்தையும், பாவனையையும் இல்லாதொழிக்கும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸார் மேற்கொண்டு வரும் செயற்பாட்டுக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment