நாம் நினைப்பது நடைபெற இறைவனிடம் பிராத்திப்போம் - பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார் இம்றான் மஹ்ரூப் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

நாம் நினைப்பது நடைபெற இறைவனிடம் பிராத்திப்போம் - பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார் இம்றான் மஹ்ரூப்

எமது கோரிக்கைகையை ஏற்று பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கித்தந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூப்.

மிகவும் பயனுள்ளதாக அமைந்த இச்சந்திப்பில் இலங்கை பாகிஸ்தான் நல்லுறவு சம்மந்தமாகவும் சமகால பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச்சிறிய கலந்துரையாடலில் எமது நாடு தொடர்பான இம்ரான் கானின் பார்வையும் அவரின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் யூகிக்க முடிந்ததுடன் அவர் தூர நோக்குள்ள மிகச்சிறந்த தலைவர் என்பது புலனாகியது.

இக்கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக பல ஊடக நண்பர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாக அழைப்பை மேட்கொண்ட வண்ணம் உள்ளனர்.

இக்கலந்துரையாடலில் பேசப்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடுவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிப்பதில்லை என கலந்துரையாடலில் கலந்துகொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தீர்மானித்துள்ளோம். நாம் நினைப்பது நடைபெற இறைவனிடம் பிராத்திப்போம்.

No comments:

Post a Comment