சுதந்திரத்திற்குப் பின் வந்த எந்த அரசாங்கமும் விவசாயிகளுக்கு வழங்காததை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது - மட்டக்களப்பு உணவுக் களஞ்சியசாலை திறப்பு விழாவில் பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

சுதந்திரத்திற்குப் பின் வந்த எந்த அரசாங்கமும் விவசாயிகளுக்கு வழங்காததை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது - மட்டக்களப்பு உணவுக் களஞ்சியசாலை திறப்பு விழாவில் பந்துல குணவர்தன

சுதந்திரத்திற்குப் பின் வந்த எந்த அரசாங்கமும் விவசாயிகளுக்கு வழங்காத பாரிய ஏற்பாடுகளையும், வசதி வாய்ப்புக்களையும் இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு வேண்டியளவு நெல் உற்பத்தி செய்வதற்குத் தேவையான உரம், நீர் என்பவற்றை இலவசமாக வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அரிசியினை முழுமையாக நிறுத்தியிருக்கிறது என வரத்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உணவு களஞ்சியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்ளப்பு கள்ளியன்காடில் அமைந்துள்ள உணவு களஞ்சியசாலை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (20) திறந்து வைத்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாமல் சேதமடைந்திருந்த கள்ளியன்காடு உணவுக் களஞ்சியசாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நேக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைய சுமார் 70 மில்லியன் ரூபா செலவில் புனருத்தாபனம் செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வரத்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இக்களஞ்சியசாலையை வைபவ ரீதியகத் திறந்து வைத்தார்.

இதன்போது பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், உணவு ஆணையாளர் திணைக்கள பிரதம கணக்காளர் கலாநிதி ஈ.எம்.என்.ஆர். பண்டார, மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், விவசாயிகள் பலரும் கலந்துகொண்டார்கள்.

இதன்போது அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்கையில், சுதந்திரத்திற்குப் பின் வந்த எந்த அரசாங்கமும் விவசாயிகளுக்கு வழங்காத பாரிய ஏற்பாடுகளையும், வசதி வாய்ப்புக்களையும் இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

விவசாயிகளுக்கு வேண்டியளவு நெல் உற்பத்தி செய்வதற்குத் தேவையான உரம், நீர் என்பவற்றை இலவசமாக வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அரிசியினை முழுமையாக நிறுத்தியிருக்கிறது.

நாட்டு அரிசிக்கு கிலோ 50 ரூபாவையும், சம்பாவிற்கு 52 ரூபாவினையும் விலை நிர்ணயம் செய்திருக்கிறது. இதனால் குறைந்த செலவில் நெல் உற்பத்தி செய்வது விவசாயிகள் இலாபம் பெறக்கூடியதாக உள்ளது. இதனால் விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் கிழக்கிலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றும் இலங்கை வரலாற்றில் க.பொ.த. சாதாரண தரம் சித்தியடையாத ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலை வழங்க முடிவெடுத்த ஒரேயொரு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

(க. விஜயரெத்தினம், வடிவேல் சக்திவேல்)

No comments:

Post a Comment