கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 38 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனால் 1,429 பயணிகள் தமக்கான சேவையினை பெற்றுக் கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி இக்காலக் கட்டத்தில் 20 விமானங்களினூடாக 855 பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து வருகை தந்த 133 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து வருகை தந்த 81 பேரும் அடங்குவர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை இக்கால கட்டத்தில் 18 விமானங்களின் மூலமாக 574 பயணிகள் நாட்டிலிருந்து புறப்பட்டும் உள்ளனர்.
இந்தியாவின் புதுடெல்லிக்கு 126 பேரும், ஓமானின் மஸ்கட்டிற்கு 123 பேரும் இவ்வாறு புறப்பட்டவர்களில் அடங்குவர் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் மேலும் கூறினர்.
No comments:
Post a Comment