பாடசாலை முதலாம் தவணை நாளை நிறைவு - இதுவரை திறக்கப்படாத பாடசாலைகளும் மார்ச் 15 இல் திறப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

பாடசாலை முதலாம் தவணை நாளை நிறைவு - இதுவரை திறக்கப்படாத பாடசாலைகளும் மார்ச் 15 இல் திறப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2021 ஆம் ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (24) நிறைவடைகிறது.

இதேவேளை, 2020 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைககள், எதிர்வரும் மார்ச் 1 முதல் மார்ச் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதால், முதலாம் தவணையின் முதல் கட்டத்தை நாளை (25) வியாழக்கிழமையுடன் நிறைவு செய்ய முடிவு செய்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, இதுவரை மேல் மாகாணத்தில் திறக்கப்படாத பாடசாலைகள் உள்ளிட்ட, இதுவரை திறக்கப்படாத பாடசாலைகள் மார்ச் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, தற்போது விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகளுக்கு முதலாம் தவணையின் இரண்டாம் கட்டமும் அதே தினத்தில், மார்ச் 15ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கொழும்பிலுள்ள பாடசாலைகளை பெப்ரவரி 15ஆம் திகதி திறக்க திட்டமிட்ட போதிலும், சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பரிந்துரைக்கமைய அது பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment