பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு PCR பரிசோதனை - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு PCR பரிசோதனை

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து நேற்று (11) மாலை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

நாளைய தினம் (13) மற்றும் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆகிய தினங்களில் பாராளுமன்ற கட்டட தொகுதியில் PCR பரிசோதனையை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்த இரு தினங்களும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment