பாராளுமன்ற உறுப்பினருக்கான இருக்கையொன்று வெற்றிடமாகியுள்ளதாக சட்டமா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு பாராளுமன்ற இருக்கை ஒன்று வெற்றிடமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.
No comments:
Post a Comment