இலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 24, 2021

இலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்

(ஆர்.யசி)

அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலை துறைமுகம் நோக்கி பயணமாகிய லைபீரியா நாட்டு கப்பலான எம்.வி. யுரோசன் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறையொன்றில் மோதிய நிலையில் சிக்குண்டுடிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் கப்பல் மீட்கப்பட்டது.

கப்பலில் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33 ஆயிரம் டொன்னும், 720 மெற்றிக் டொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியா நாட்டுக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எம்.வி. யுரோசன் சரக்குக் கப்பல் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி அபுதாபியில் இருந்து சீமெந்துக்கான திரவ பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களுடன் இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தை நோக்கி பயணமாகியுள்ள நிலையிலேயே நேற்று நண்பகல் சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் ஆழமற்ற நீரோட்டத்தில் பயணித்த நிலையில் சுண்ணாம்பு பாறைகளில் மோதியதுடன் கப்பலின் கீழ் தளம் பாறை ஒன்றில் சிக்குண்டுள்ளதை அடுத்து கப்பலை நகர்த்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. எனினும் இன்று பிற்பகல் வேளையில் இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை மீட்டு குறித்த இடத்தை விட்டு நகர்த்தியுள்ளனர்.

எம்.வி. யுரோசன் கப்பலில் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33 ஆயிரம் டொன்னும், 720 மெற்றிக் டொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றிக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

அத்துடன் எம்.வி. யுரோசன் கப்பலை நகர்த்தும் முயற்சியில் கடல் கீழ் மீட்பு முயற்சிகளில் இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது கப்பலின் கீழ் பகுதியில் ஒரு பாகம் கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியுள்ளது கண்டறிந்துள்ளதுடன் கப்பலின் கீழ் பாகத்தில் ஓரளவு சேதமும் ஏற்பட்டுள்ளதையும் இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். 

எவ்வாறு இருப்பினும் கப்பலை நகர்த்தும் முயற்சிகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துவந்த நிலையில் நேற்று பிற்பகல் வேளையில் கப்பலை நகர்த்தியுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியது.

No comments:

Post a Comment