நிபுணர் குழுவின் சிபாரிசின் படி வர்த்தமானி அறிவிப்பை மாற்றி அடக்கம் செய்ய அனுமதி தாருங்கள் - ஜனாதிபதியிடம் அலி ஸாஹிர் மௌலானா கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

நிபுணர் குழுவின் சிபாரிசின் படி வர்த்தமானி அறிவிப்பை மாற்றி அடக்கம் செய்ய அனுமதி தாருங்கள் - ஜனாதிபதியிடம் அலி ஸாஹிர் மௌலானா கோரிக்கை

இலங்கை அரசின் சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட 6 நோய்க்கிருமிகள் சம்பந்தப்பட்ட நிபுனர்கள், 3 நுண்ணுயிர் ஆய்வாளர்கள், 1 நோயெதிர்ப்பு நிபுனரும், 1 நோய்தடுப்பு நிபுணருமாக மொத்தம் 11 பேரை கொண்ட புகழ்பெற்ற நிபுணத்துவம் பெற்ற குழாமானது அவர்களது ஆய்வின் முடிவில் கோவிட் 19 ஆல் இறப்பவர்களது உடல்களை நல்லடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யப்படலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

ஆகவே குறித்த பரிந்துரைகளை கருத்திற் கொண்டு நிபுணர் குழாமின் அறிக்கையின் படியே செயற்படலாம் என்ற தங்களது கடந்த கால உறுதி மொழிகளின் பிரகாரம் உடலங்களை அடக்கம் செய்வது அல்லது எரிப்பது தொடர்பான வர்த்தமான அறிவிப்பை மாற்றங்களோடு வெளியிடுமாறு வினயமாக வேண்டுகிறேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சின் செயலாளரால் கடந்த 24.12.2020 அன்று நியமிக்கப்பட்ட நிபுணர் குழாமானது 30.12.2020ஆம் திகதி அன்று தமது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் நகல் ஊடகங்களால் வெளியிடப்பட்டிருந்தும், இந்த அறிக்கை குறித்து அரசாங்கத்தின் முடிவு இன்னும் எட்டப்படவில்லை.

இதன் அடிப்படையில் கட்டாய தகனங்கள் குறித்து தங்களது கடமைப்பாட்டை உணர்ந்து பொறுப்புணர்ச்சியுடன் விரைவாக அதிகார பூர்வமாக மாற்றி அமைக்கப்பட்ட வர்த்தமானியை வெளியிடுமாறு நான் அரசாங்கத்தை வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ அவர்கள் நிபுணர்களின் விஞ்ஞான பூர்வமான ஆலோசனைகள் பெற்றே செயல்படுவதாக உறுதியளித்தீர்கள். உங்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அவர்களது ஆய்வுகளுடன் ஆதாரபூர்வமான சிபாரிசுகளை உத்தியோக பூர்வமாக சமர்ப்பித்திருக்கிறார்கள். 

உங்களது பணிப்பின்படி நோயெதிர்ப்பு நிபுணர்களை கொண்ட சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட உத்தியோக பூர்வமான நிபுணர் குழு, கோவிட்19 ஆல் இறந்தவர்களது உடல்கள் அடக்கம் அல்லது தகனம் செய்ய பரிந்துரைத்துள்ளது.

உங்களது மேலான காருண்மையான, கடமை உணர்வுடனான, மனிதாபிமான நடவடிக்கையே எங்களால் நாடப்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment