பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான காரியாலயம் மற்றும் முத்துராஜவெல பிரிவும் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான காரியாலயத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி ஒருவர் இனங்காணப்பட்ட நிலையிலேயே தற்காலிகமாக மேற்படி இரண்டு கட்டிடங்களும் மூடப்பட்டதாக கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.
முத்துராஜவெல எரிபொருள் சுத்திகரிப்பு பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் முன்பே காரியாலயத்திற்கு கடமைக்காக திரும்பி உள்ளதாகவும் அவர் அங்கு பல்வேறு பிரிவுகளுக்கும் நடமாடி உள்ளதாகவும் கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து பிசிஆர் பரிசோதனை அறிக்கைக் கிணங்க அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் மேற்படி இரண்டு கட்டிடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment