இராணுவத்தின் 5 பிரிகேடியர்கள், மேஜர் ஜெனராலாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, விசேட படையின் 24 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இராணுவ விசேட படையணியைச் சேர்ந்த 560 பேர் அடுத்த நிலைக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
விஷேட படையின் படைத் தளபதியின் சிபாரிசின் பேரில் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் நிலை 1 இல் இருவரும், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் நிலை 2 இல் 18 பேரும், பதவி நிலை சார்ஜென்ட்கள் 61 பேரும், சார்ஜென்ட்கள் 84 பேரும், கோப்ரல்கள் 325 பேரும், லான்ஸ் கோப்ரல்கள் 70 பேரும் இவ்வாறு ஆளணி முகாமைத்துவ பணிப்பகத்தினால் நிலை உயர்த்தப்பட்டுள்ளனர்.
இராணுவ விசேட படையணி வரலாற்றில் பெருமளவான உறுப்பினர்களுக்கு இவ்வாறு தரமுயர்வு வழங்கப்பட்டமை இதுவே முதல்முறையாகும்.
No comments:
Post a Comment