கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்கள் 1300 ஐ தாண்டியது - கல்முனையில் 839, மட்டக்களப்பில் 250, திருமலையில் 165, அம்பாறையில் 33 - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்கள் 1300 ஐ தாண்டியது - கல்முனையில் 839, மட்டக்களப்பில் 250, திருமலையில் 165, அம்பாறையில் 33

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்றையதினம் 1300 ஜத் தாண்டியது.

புத்தாண்டில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் திவீரமாகி வருகின்றது. அங்கு நேற்று வரை 1310 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இத்தரவுகளை கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதமிருந்து பேலியகொட மூலமாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 250 பேரும், கல்முனை பிராந்தியத்தில் 839 பேரும், திருமலை மாவட்டத்தில் 165 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 33 பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

இதுவரை கிழக்கில் சம்மாந்துறை, ஒலுவில், சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி, இறுதியாக ஆயைடிவேம்பிலுமாக மொத்தம் 07 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

கல்முனைப் பிராந்தியத்தில் 839 ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 801 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் அக்கரைப்பற்று 310, அடுத்ததாக கல்முனை தெற்கு 190 தொற்றுக்கள், பொத்துவில் 76, அட்டாளைச்சேனை 71, சாய்ந்தமருது 51, ஆலையடிவேம்பு 35, இறக்காமம் 23, சம்மாந்துறை 18, கல்முனைவடக்கு 14, திருக்கோவில் 15, நிந்தவுர் 13, காரைதீவு 13, நாவிதன்வெளி 10 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை பிராந்தியத்தில் 10 க்கு குறைந்த எண்ணிக்கையுடைய ஒரேயொரு சுகாதாரப் பிரிவாக இருந்த நாவிதன்வெளிப் பிரிவில் இறுதியாக 5 பேர் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கமாக அதாவது 10 ஆக மாறியுள்ளது.

அதேவேளை கல்முனை மாநகர எல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 255 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது.

கல்முனை தெற்கில் 190 பேரும், சாய்ந்தமருதில் 51 பேரும், கல்முனை வடக்கில் 14 பேரும், தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக சாய்ந்தமருதுப் பிரிவில் ஒருவர் இனங்காணப்பட்டதனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக இவ்விதம் 51 ஆக உயர்ந்துள்ளது. கல்முனையின் 11 கிராம சேவர் பிரிவுகளில் முடக்கச் செயற்பாடு 7 ஆவது நாளாக அமுலில் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 80 பேரும், கோறளைப்பற்றில் 65 பேரும், களுவாஞ்சிக்குடியில் 30 பேரும், ஏறாவூரில் 15 பேரும், மட்டக்களப்பில் 16 பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். 

திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 88 பேரும், மூதூரில் 42 பேரும், கிண்ணியாவில் 17 பேரும், கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.

கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத் தொற்றாளர்கள் 33 பேர் அம்பாறை சுகாதாரப் பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 839 பேர் கல்முனை சுகாதாரப் பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கிழக்கில் 40355 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

காரைதீவு நிருபர்

No comments:

Post a Comment