மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனை, ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனை, ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள்

(செ. தேன்மொழி)

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் எழுமாறாக அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகவும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செல்லும் நபர்களுக்கு முன்னெடுக்கப்படும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய நேற்று மாத்திரம் 940 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களில் 16 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 

இதன்போது தொற்றாளர்களுடன் பணித்ததாக கூறப்படும் 195 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 18 ஆம் திகதி முதல் இன்று காலை வரை 11926 பேருக்கு இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 90 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்போது தொற்றாளர்களுடன் பயணித்த 572 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை காலி முகத்திடலில் எழுமாறாக அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுத்ததைப் போன்று மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதகளில் இவ்வாறு எழுமாறாக அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இதற்கு பொது மக்கள் எதிர்ப்பின்றி ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment