பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் - காரணம் என்ன? - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் - காரணம் என்ன?

இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வீதி மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ்  பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்கு வரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன. 

குறிப்பாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான எல்லையை மூடியுள்ளது. இதனால், இங்கிலாந்துடனான வீதிப் போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்துடனான எல்லையை பிரான்ஸ் மூடியதையடுத்து ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் இரு நாட்டு எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் இரு நாட்டு எல்லையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சரக்கு லாரிகள் போக்கு வரத்து நிறுத்தப்பட்டதால் ஐரோப்பிய நாடுகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் நிலவியது.

இதையடுத்து, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் இடையே இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அந்த பேச்சுவார்த்தையில், இங்கிலாந்தில் இருந்து சரக்கு லாரிகளை பிரான்ஸ் எல்லைக்குள் நுழைய ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் சம்மதம் தெரிவித்தார். 

ஆனாலும், எல்லையிலேயே லாரி டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனைக்கு பின்னரே சரக்கு லாரிகள் இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

கிறிஸ்துமஸ் விழாவை குடும்பத்துடன் கொண்ட சொந்த ஊருக்கு திட்டமிட்டிருந்த சரக்கு லாரி சாரதிகள் பலரும் இரு நாட்டு எல்லை மூடல் விவகாரத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இன்னும் ஆயிரக்கணக்கான லாரிகள் இங்கிலாந்து - பிரான்ஸ் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இதனால், மிகவும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. 

சிலர் கிறிஸ்துமஸ் முடிவடந்த பின்னர்தான் தாங்கள் எல்லையில் இருந்தே வெளியேற முடியும் எனவும் குடும்பதினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment