எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், காட்டுநாயக்க மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை வாரத்திற்கு 03 ஆக உயர்த்த இலங்கை ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தவிர கட்டுநாயக்க - மலேசியாவின் கோலாலம்பூருக்கிடையேயான வாராந்திர விமான சேவையை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் தொடர்புடைய விமான போக்கு வரத்து கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்புடைய நாடுகளால் விதிக்கப்பட்ட எல்லை மூடல்களுக்கு உட்பட்டு இயங்கும்.
இலங்கை ஏர்லைன்ஸுடன் இந்த இடங்களுக்கும் அதற்கு அப்பாலும் பயணிக்க விரும்பும் பயணிகள் கொழும்பு, காலி மற்றும் கண்டியில் உள்ள விமான நிறுவனத்தின் டிக்கெட் அலுவலகங்களிலிருந்து அல்லது தங்களுக்கு விருப்பமான பயண முகவர் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மேலும் தகவலுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உலகளாவிய தொடர்பு மையத்தை +94117771979 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது www.srilankan.com என் இணையத்தளத்தை பார்வையிடவும்.
No comments:
Post a Comment