வவுனியாவில் இன்று மட்டும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய சாளம்பைக் குளம் உப கொத்தணியில் இருந்து மூன்று பேருக்கும் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவற்றைவிட, வவுனியா கற்குழியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி மற்றும் திருநாவற்குளத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் எழுமாறாக அவர்களிடம் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள தெற்கினைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, சமூகத்தில் இருந்து இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் மறு அறிவிப்புவரை இடைநிறுத்தப்படுவதாக வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இறம்பைக்கும் மகளீர் மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் வித்தியாலயம், காமினி மகா வித்தியாலயம் ஆகியனவே இவ்வாறு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment