(எம்.நியூட்டன்)
யாழ். மாநகரை அபிவிருந்தியடைந்த மாநகராக மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை முடிந்தளவிற்கு முன்னெடுப்பேன் என யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
இன்றைய பதவி ஏற்பின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் கால வாக்குறுதியாக தன்னால் முன்வைக்கப்பட்ட யாழ். நகர அபிவிருத்தித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடிய சூழல் தற்போது இல்லை என்றாலும், அதற்கான முயற்சிகளைத் தான் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இன்றைய தெரிவில் என்னை தெரிவு செய்த உறுப்புனர்களுக்கும் முன்னாள் முதல்வர் மற்றும் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியையும் தெரிவித்து கொண்டார்.
இதேவேளை, என்னை யாரும் போட்டியிட வேண்டாம் என்று வலியுறுத்தவில்லை என்று தெரிவித்த அவர், ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்போம் என்று தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களில் தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் அவரைத் தோற்கடிக்கும் நடவடிக்கையினையே தான் முன்னெடுத்ததாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment