நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து சட்டத்தரணிகள் ஒதுங்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து சட்டத்தரணிகள் ஒதுங்க தீர்மானம்

மல்லாகம் நீதிமன்ற நியாயாத்திக்கத்துக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேற்று திங்கட்கிழமை முதல் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருக்கத் தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி சோ.தேவராஜா மற்றும் செயலாளர், சட்டத்தரணி க.சுகாஷ் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

நீதிமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் பருவகால விடுமுறைக்காக இடைநிறுத்தப்படவுள்ள நிலையில் 4 நாட்கள் முன்னதாக சட்டத்தரணிகள் சங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment