மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம், நடைபெறவுள்ள தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும் - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம், நடைபெறவுள்ள தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும் - ரோஹித அபேகுணவர்தன

(இராஜதுரை ஹஷான்) 

மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம். நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும் என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபை முறைமை இரத்து செய்யல் என அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது.

பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தில் அரசியல் நோக்கங்களுக்காக மாகாண சபை முறைமை பலவீனப்படுத்தப்பட்டது.

மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம். மாகாண சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்று மாகாண சபை முறைமையை பலப்படுத்தும்.

இறக்குமதி பொருளாதாரத்தை மட்டுப்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கிராமிய மக்களின் அபிப்ராயங்களுக்கு அமைய 2021 வரவு செலவு திட்டம் உருவாக்கப்பட்டது." செயற்திட்டங்களுடன் மீண்டும் கிராமத்துக்கு" வேலைத்திட்டம் இம்மாதம் 25 ஆம் திகதியில் இருந்து ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை சுமார் 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவு ஊடாக முன்னெடுக்கப்படும்.

இச்செயற்திட்டம் ஊடாக கிராமிய உற்பத்திகள் மேம்படுத்தப்படும். இன்னும் இரண்டு வருட காலத்திற்குள் அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment