திருகோணமலை காட்டுப் பகுதியிலிருந்து ஐந்து கைக் குண்டுகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 5, 2020

திருகோணமலை காட்டுப் பகுதியிலிருந்து ஐந்து கைக் குண்டுகள் மீட்பு

திருகோணமலை - சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப் பகுதியில், ஐந்து கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீலபொல காட்டுப் பகுதியில் கைக் குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய நேற்று (வெள்ளிக்கிழமை) அப்பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடபட்டபோது, ஐந்து கைக் குண்டுகளை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கைக் குண்டுகளை, திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர்.

குறித்த கைக் குண்டுகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எஸ்.எப்.87 வர்க்கத்தை சேர்ந்தது என தெரிவித்த சேருவில பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment