ஜோர்தான், ஓமான், கட்டார், சீனாவிலிருந்து 389 பேர் இலங்கையை வந்தடைந்தனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

ஜோர்தான், ஓமான், கட்டார், சீனாவிலிருந்து 389 பேர் இலங்கையை வந்தடைந்தனர்

இன்று (03) காலை ஜோர்தானிலிருந்து 284 பேர், ஓமானிலிருந்து 54 பேர், கட்டாரிலிருந்து 49 பேர், சீனாவிலிருந்து 02 பேர் இலங்கை திரும்பியுள்ளனர்.

இன்று காலை UL 554 எனும் விமானம் மூலம் ஜோர்தானிலிருந்து 284 பேரும், கட்டாரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம் 49 பேரும், ஓமானிலிருந்து YW 371 எனும் விமானம் மூலம் 54 பேரும், UL 881 விமானம் மூலம் சீனாவிலிருந்து 2 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், இந்தியாவிலிருந்து AI 281 எனும் விமானம் மூலம் ஒரு சிலர் நாடு திரும்பியதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு இலங்கை வந்தடைந்த அனைவரும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தற்போது வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும், 59 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,400 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்றையதினம் (02) 13,423 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment